Sunday 5th of May 2024 06:24:47 AM GMT

LANGUAGE - TAMIL
-
தெதர்லாந்தில் பகுதியளவிலான  முடக்க நிலை அமுலுக்கு வந்தது!

தெதர்லாந்தில் பகுதியளவிலான முடக்க நிலை அமுலுக்கு வந்தது!


நெதர்லாந்தில் பகுதியளவிலான சமூக முடக்க உத்தரவு இன்று முதல் அமுலுக்கு வந்துள்ளது.

புதிய தொற்று நோயாளர் தொகை அதிகரிப்பு மற்றும் கவலைக்குரிய ஓமேக்ரான் புதிய திரிபு பரவல் கவலைகளுக்கு மத்தியில் புதிய பகுதியளவிலான முடக்க நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

நெதர்லாந்தில் குறைந்தது அடுத்த மூன்று வாரங்களுக்கு, கபேக்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் திரையரங்குகள் மற்றும் கலாசார அரங்குகள் உள்ளூர் நேரப்படி மாலை 05 மணிக்குள் (16:00 GMT) மூடப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் மருத்துவமனைகள் தொற்று நோயாளர்களால் வேகமாக நிரம்பிவரும் நிலையில் பாதுகாப்பதற்கான முன்னேற்பாடு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, தென்னாப்பிக்காவில் இருந்து 2 விமானங்களில் நெதர்லாந்துக்கு வந்த 600 பேரில் 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் சிலர் புதிய வகை கொரோனா தொற்றான ‘ஒமேக்ரான்’ தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

இதனை உறுதிசெய்யுகொள்வதற்கான சோதனைகள் நடைபெற்று வருகின்றன. முடிவுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் என நெதர்லாந்து சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து தொற்று உறுதி செய்யப்பட்ட அனைவரும் 7 நாள்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE